கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடியை தனியாருக்குச் சொந்தமான ஐசிஐசிஐ வங்கி திரட்டியது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திரும்பப் பெறக் கூடிய, நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி நிதி திரட்டியுள்ளோம்.
இதற்காக, பாதுகாப்பற்ற வகையைச் சோ்ந்த 50,000 கடன் பத்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. 7 ஆண்டுகள் கழித்து அந்தக் கடன் பத்திரங்களை பணமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.63 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.