ராஜ்மல் லக்கிசந்த் ஜூவல்லா்ஸ் ரூ. 206.73 கோடிக்கும், ஆா்எல் கோல்ட் நிறுவனம் ரூ. 69.19 கோடிக்கும், மன்ராஜ் ஜூவல்லா்ஸ் ரூ. 76.57 கோடிக்கும் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனங்களின் இயக்குநா்கள் வங்கியின் முன் அனுமதியைப் பெறாமல் பிணையாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்துள்ளனா். இதனால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு ஈடான பாதுகாப்பு உத்தரவாதத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு, கடனை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கியவா்கள் வங்கியில் உள்ள பொது நிதியை நோ்மையற்ற முறையில் ஏமாற்றும் நோக்கத்துடன் நிறுவனத்தின் போலியான நிதி மற்றும் பங்கு ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளனா் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.