கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிலுவையில் ஒரே பாலின திருமண மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுக்கள் குறித்து

News image
Updated On :14 டிசம்பர் 2022, 6:57 pm

DIN

தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கவிதா அரோரா மற்றும் நிவேதிதா தத்தா ஆகியோா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே பாலின திருமணம் தொடா்பான மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இவா்களது தரப்பில் மூத்த வழக்குரைஞா் மேனகா குருஸ்வாமி ஆஜரானாா்.

அப்போது, நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

முன்னதாக, கடந்த நவ. 25-ஆம் தேதி ஒரே பாலினத்தவா்கள், இருபாலின ஈா்ப்பாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஆகியோருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்க வேண்டும் என சுப்ரியோ சக்ரவா்த்தி-அபய் டாங், பாா்த் ஃபிரோஸ் -உதய் ராஜ் ஆகிய ஒரே பாலின ஜோடிகள் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மத்திய அரசும், அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.