விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படகு கவிழ்ந்ததில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:37 pm IST

தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படகு கவிழ்ந்ததில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது. அசாமின் மோரிகயோன் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் படகில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: நாட்டுப் படகில் 7 பேர் பிரம்மபுத்திரா நதியில் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு மற்றொரு இயந்தியரப் படகின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து நதியில் கவிழ்ந்தது. இயந்திரப் படகில் வேகமாக மோதியதால் நாட்டுப் படகில் உள்ள அனைவரும் விழுந்துள்ளனர். அதில் 4 பேர் நீந்தி பத்திரமாக கரைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், 3 பேர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இறந்தவர் பிம்லா கட்டுன் என்ற பெண் மற்றும் அவரது மகன் ஜின்னாத்துல் இஸ்லாம் மற்றும் மகள் இஸ்தாரா கட்டுன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.