டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இந்தியப் பொருளாதாரம் குறித்த ரகுராம் ராஜனின் பார்வை மாறும்: மத்திய அமைச்சர்

இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் மறுத்துள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2022, 8:00 pm IST

இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.

உலக நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன் தினம் (டிசம்பர் 14) காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார். 

இந்த ஒற்றுமை யாத்திரையின்போது ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசியதாவது: அடுத்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்துக்கு கடினமாக இருக்கும். உலகம் முழுவதும் பொருளாதாரம் இறங்கு முகத்தில் செல்லவுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் நிலவும் பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் இந்தியா 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டுவதே கடினம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் இந்த கணிப்பை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கஜேந்திர செகாவத் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் என நம்பிக்கையில்லாமல் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதற்கு அவர் மட்டும்தான் விளக்கம் கொடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7-8 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. உலக வங்கியும் இந்தியப் பொருளாதாரம் 6.9 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. அதன்பிறகு தனி ஒருவர் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகித வளர்ச்சியை எட்டுவதே கடினம் என்று கூறினால் அதற்கு அவர்தான் எவ்வாறு என்று விளக்கமளிக்க வேண்டும். எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்பதை அவர் மட்டுமே விளக்க முடியும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.