இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.
உலக நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன் தினம் (டிசம்பர் 14) காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார்.
இந்த ஒற்றுமை யாத்திரையின்போது ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசியதாவது: அடுத்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்துக்கு கடினமாக இருக்கும். உலகம் முழுவதும் பொருளாதாரம் இறங்கு முகத்தில் செல்லவுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் நிலவும் பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் இந்தியா 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டுவதே கடினம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் இந்த கணிப்பை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கஜேந்திர செகாவத் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் என நம்பிக்கையில்லாமல் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதற்கு அவர் மட்டும்தான் விளக்கம் கொடுக்க முடியும்.
ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7-8 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. உலக வங்கியும் இந்தியப் பொருளாதாரம் 6.9 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. அதன்பிறகு தனி ஒருவர் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகித வளர்ச்சியை எட்டுவதே கடினம் என்று கூறினால் அதற்கு அவர்தான் எவ்வாறு என்று விளக்கமளிக்க வேண்டும். எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்பதை அவர் மட்டுமே விளக்க முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


