கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை, மக்களின் பிரச்னையை எழுப்புகிறது: பைலட்

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை என்றும் மக்களின் பிரச்னைகளை எழுப்புகிறோம் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 12:24 pm

DIN

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை என்றும் மக்களின் பிரச்னைகளை எழுப்புகிறோம் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தானின், அலிகாரில் உரையாற்றிய பைலட் கூறுகையில், 

ஒற்றுமை நடைப்பயணம் மாநிலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. 

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமூகத்தில் ஏற்படும் பிளவுகள் மற்றும் நிறுவனங்கள் அழிக்கப்படுவது போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த அணிவகுப்பு எழுப்பியுள்ளது. 

மேலும், ஒற்றுமை நடைப்பயணத்தில் யாரும் எதிர்மறையான பிரச்னைகளை எழுப்பவில்லை, அன்பு, நல்லிணக்கம், நமது கலாசார பாரம்பரியம் மற்றும் மக்களை ஒன்றிணைப்பது பற்றி மட்டுமே பேசப்படுவதாக அவர் கூறினார். 

இந்த நடைப்பயணத்தை எப்படித் தாக்குவது மற்றும் விமர்சிப்பது என்று தெரியாமல் பலர் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.