தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்! ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2022, 12:44 pm

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்க உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட் இன்று அறிவித்துள்ளார்.

"அடுத்த மாத பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார். ஆனால் சமையல் எரிவாயு உருளை காலியாக உள்ளது. 

ஏனெனில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் இப்போது  ரூ.400 முதல் ரூ.1,040 வரை உள்ளன" என்று அசோக் கெலாட்  கூறினார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.