தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு
தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.


தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் தில்லியின் பாஸ்சிம் விஷார் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே மர்ம பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு கண்டறியும் குழுவை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க- இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்
ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை . முன்னதாக இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "பாஸ்சிம் விஹாரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அந்த பொருள் வைஃபை ரூட்டர் அல்லது டிஜிட்டல் லாக் போல காட்சியளித்தது. வெடிகுண்டு கண்டறியும் குழு சம்பவ இடத்தில் உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...