காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 8:31 am

DIN

தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைநகர் தில்லியின் பாஸ்சிம் விஷார் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே மர்ம பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு கண்டறியும் குழுவை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். 

ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை . முன்னதாக இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "பாஸ்சிம் விஹாரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 

அந்த பொருள் வைஃபை ரூட்டர் அல்லது டிஜிட்டல் லாக் போல காட்சியளித்தது. வெடிகுண்டு கண்டறியும் குழு சம்பவ இடத்தில் உள்ளது என்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.