தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியை சூழ்ந்த மூடுபனி: போக்குவரத்து கடும் பாதிப்பு! 

தலைநகர் தில்லியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 7:24 am

தலைநகர் தில்லியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் காலை வேளையிலும், இரவிலும் பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிகாலையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அடர்ந்த மூடுபனி 150 மீட்டராகக் குறைந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதித்துள்ளது. 

இதுதொடர்பாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 

அடர்ந்து மூடுபனி காரணமாக சுமார் 20 ரயில்கள் 15 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. அறிவிப்புகள் மற்றும் பிற வழிகள் மூலம் பயணிகளுக்கு அட்டவணைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், விமானச் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

பஞ்சாப் முதல் கிழக்கு உத்தரப் பிரதேசம் வரை, அதைத்தொடர்ந்து ஹரியாணா மற்றும் தில்லி முழுவதும் அடர்த்தியான மூடுபனி படர்ந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாலம் விமான நிலையத்தில் அதிகாலை 3:30 மணி முதல் 6 மணி வரை பார்வைத் திறன் 150-200 மீட்டராகக் குறைந்து, காலை 7 மணிக்குள் 350 மீட்டராக மேம்பட்டதாக ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிர்தசரஸ், பாட்டியாலா, பரேலி, லக்னௌ மற்றும் பஹ்ரைச் ஆகிய இடங்களில் அதிகாலையில் 25 முதல் 50 மீட்டர் வரை பார்வை நிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் உள்ள சமவெளிகளில் அடர்த்தியான மற்றும் மிக அடர்த்தியான மூடுபனி இருக்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.