தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: 6,000 பறவைகள் அழிப்பு

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று  பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2022, 8:12 am

DIN

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று  பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.

மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் சனிக்கிழமையன்று மொத்தம் 6,017 பறவைகள் அழிக்கப்பட்டன. அதில் வாத்துகள் அதிகம் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் பலியாகின.

இதற்கிடையில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.