திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த கும்ப்ளேவை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு சுயப்படம் எடுத்தனர்.
இதையும் படிக்க- பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்து: குலுவில் 30 வயது இளைஞர் பலி
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை 24 மணிநேரம் காத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.