மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பார்சலில் வந்த மிக்ஸி வெடித்து ஒருவர் காயம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2022, 3:08 am

DIN

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

கூரியர் அலுவலகத்துக்கு  வந்த மிக்ஸி வெடித்ததில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் கடையின் உரிமையாளர் மிக்சியின் பிளேடால் காயமடைந்ததாகவும், கை, வயிறு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களைப் பெற்றுள்ள காவல்துறையினர், கூரியர் கடையில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.