ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்

ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

News image

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்

Updated On :28 டிசம்பர் 2022, 7:45 am

PTI

ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

காங்கிரஸின் நிறுவன தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 

காங்கிரஸ் கட்சியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கெலாட், காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து காங்கிரஸ் கட்சியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று நமக்குப் பெருமையும், புகழும் நிறைந்த நாள் என்றார். 

கட்சி நிறுவப்பட்டதிலிருந்து நீண்ட தூரம் பயணித்துள்ளோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரானது என்று ராகுல் காந்தி கூறினார். அது தொடரும். அரசியலமைப்பைப் பாதுகாக்க எங்களால் முடியும்.

அவர்கள் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தின் வேர்களைப் பலவீனப்படுத்துகிறார்கள், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது.

கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றதைக் குறிப்பிட்டு கெலாட், 50 ஆண்டுகளில் முதன்முறையாக தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சியின் தலைவரானார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துகள். ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொது சேவையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.