பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குஜராத் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் தெரிவிக்க முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் குஜராத் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று குஜராத் செல்கிறார்.
இதையும் படிக்க | தாயாரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.