ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உபி: ரூ.41 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.41 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 7:18 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.41 கோடியை மோசடி செய்த வங்கி மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னௌ அலம்பா கிளை வங்கி மேலாளரான அகிலேஷ்குமார் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதில் மோசடிக்கான காரணமாக, அகிலேஷ் வங்கி மேலாளராக இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த 4 பேர்  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பெயரில் ரூ.41 கோடி நிலையான வைப்புத்தொகையை (FD) பெற விரும்புவதாக தெரிவித்தனர். 

அதன்பின் அவரைச் சந்தித்த மேலும் 4 பேரான - சதீஷ் திரிபாதி, அமித் திவாரி, ஓம் பிரகாஷ் என்ற மேலாளர், மற்றும் பிரபாத் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யுமாறும் வைப்புத் தொகைக்கான கால அவகாசம் முடிவதற்குள் பணத்தைத் திரும்ப செலுத்தி விடுகிறோம் எனக் கூறியதுடன் அகிலேஷ்குமாருக்கு ரூ.1.25 கோடியை அதற்கான லஞ்சமாகவும் கொடுத்தனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு 4 பேரின் வங்கிக் கணக்கிற்கும் ரூ.41 கோடியை  மாற்றினார் அகிலேஷ். 

அதாவது, கால அவகாசம் முடிந்து கொடுக்க வேண்டிய பணத்தை லஞ்சம் பெற்றுக்கொண்டு அசல் முதலீட்டாளர்களின் தொகையை  எந்த நம்பிக்கையில் திருப்பிப் கொடுப்பார்கள் என நினைத்து வேறு சிலருக்குக் கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டார். பின் சில நாள்கள் கழித்து குற்றம் உறுதிசெய்யப்பட்டதும் அகிலேஷ்குமார் தலைமறைவானார்.

தற்போது 2 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.