அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:
மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சமூக காப்பீட்டு பயன்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.