ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திரிணமூல் காங்கிரஸின் தலைவராக மம்தா மீண்டும் தேர்வு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :2 பிப்ரவரி 2022, 8:55 am

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவரின் பதவிக் காலம் முடிவடையவுள்ளதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு எதிராக யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பார்தா சாட்டர்ஜி அறிவித்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து மம்தா பானர்ஜி தலைவராக நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.