ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.யில் போலி தடுப்பூசி உற்பத்தி: 5 பேர் கைது 

உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் வாராணசி பிரிவு, லங்கா பகுதியில் உள்ள ரோஹித் நகரில் போலி கரோனா தடுப்பூசி மற்றும் சோதனைக் கருவிகளின் உற்பத்திப் பிரிவைக் கண்டுபிடித்துள்ளனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:28 am

DIN

உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் வாராணசி பிரிவு, லங்கா பகுதியில் உள்ள ரோஹித் நகரில் போலி கரோனா தடுப்பூசி மற்றும் சோதனைக் கருவிகளின் உற்பத்திப் பிரிவைக் கண்டுபிடித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, அப்பகுதியிலிருந்த தடுப்பூசிகள் மற்றும் சோதனை கருவிகளை காவல்துறையினர் மீட்டனர். 

இதையடுத்து 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்கள் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா, ஷம்ஷேர் மற்றும் அருணேஷ் விஸ்வகர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணையில், தானும் அவரது உதவியாளர்களும் போலி தடுப்பூசி மற்றும் பரிசோதனை கருவிகள் தயாரிப்பதில் ஈடுபட்டதாக ராகேஷ் ஒப்புக்கொண்டார்.

இந்த போலி பொருட்கள் லக்ஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. மேலும் அவர் தனது நெட்வொர்க் மூலம் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சரக்குகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.