புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்து வந்தாலும், வெள்ளிக்கிழமையன்று 23 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது கரோனா மூன்றாம் அலையில் பதிவான மிக அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். இதனால், ஒடிசாவில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,689 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, நாள்தோறும் 15க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பலியாகிவருவதாக அந்த மாநில சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதிக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் பலி எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
வயதான முதியவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் போது, அவர்களுக்கு இணை நோய்கள் இருப்பதால், உடல்நிலை மோசமடைந்து பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுபோல, தற்போது 18 வயதுக்குட்பட்டவர்களும் கரோனாவால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்திருப்பதாகவும் புதிதாக கரோனா பாதித்த 2,697 பேரில், 435 பேர் சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


