கோவா சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன.
இதில், இரண்டாம் கட்டத்தில் கோவா பேரவைக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.