சிறு, குறு தொழில்களுக்கு உதவி செய்யும் வகையில், எஃகு கழிவுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதோடு, தரமான எஃகு பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க 145 பொருள்களுக்குத் தேவையான தரச்சான்றிதழ்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருள்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், எஃகு பொருள்களின் விலையை கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார் அவர்.