கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் மேலும் 1,480 பேருக்கு கரோனா: 21 பேர் பலி

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:20 am

DIN

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 12,73,003 பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 8,818 பேர் பலியாகியுள்ளனர். 

தற்போது தொற்று பாதித்து 15,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 3,126 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 12,48,152 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். 

புதன்கிழமை மாநிலத்தில் 58,816 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.