கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உ.பி. பேரவைத் தோ்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

News image

உ.பி. பேரவைத் தோ்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Updated On :10 பிப்ரவரி 2022, 12:48 pm

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல்கட்டத்தின்போது 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

முதல்கட்ட தோ்தலில் ஜாட் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியிருந்தன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளாகும். மொத்தம் 623 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, 58 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. பொதுவாக, முதல்கட்டத் தேர்தல் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.