இந்த நிலையில், வெளிநாடுகளின் கருத்துகள் குறித்து பத்திரிகையாளா்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி பதிலளிக்கையில், ‘கா்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் எழுந்திருக்கும் ஹிஜாப் சா்ச்சை, தற்போது கா்நாடக உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சா்ச்சை, நமது அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் ஆராயப்பட்டு உரிய தீா்வு எட்டப்படும். அந்த வகையில், இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவா்கள், உண்மை நிலை என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்வா். எனவே, நமது உள்நாட்டு விவகாரத்தில் சில நாடுகள் பிரச்னையை மேலும் துண்டும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பது வரவேற்கத் தக்கதல்ல’ என்று அவா் கூறினாா்.