கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

மத்திய அரசு

Updated On :14 பிப்ரவரி 2022, 5:00 am

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவை உலவு பார்க்கும் விதமாக பல்வேறு செயலிகள் உள்ளதாக கூறி கடந்த ஆண்டில் பல சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் மேலும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பியூட்டி கேமிரா, ஸ்வீட் செல்ஃபி எச்டி, விவா விடியோ எடிட்டர், ஆப் லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.