மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்சல் அச்சுறுத்தல்: பாதுகாப்பு தீவிரம்

சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்கல்கள் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால், அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாணே குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 7:04 am

DIN

மகாராஷ்டிரத்தின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்கல்கள் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால், அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாணே குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தாணே குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு 26 தியாகி சகோதரர்கள், தளபதிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்ட விதத்தில், உங்களையும் கொன்று நாங்கள் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஷிண்டேவுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. அதையடுத்து கடந்த அக்டோபரில் மும்பையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மிரட்டல் கடிதம் ஒன்று சிக்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.