டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
பேரவைத் தேர்தலில் வாக்களித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Updated On :14 பிப்ரவரி 2022, 6:40 am

DIN

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்டின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல,  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவாவில் 26.63%, உத்தரகண்டில் 18.97%, உத்தரப் பிரதேசத்தில் 23.03% வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.