விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image

பேரவைத் தேர்தலில் வாக்களித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

Updated On :14 பிப்ரவரி 2022, 6:40 am

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்டின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல,  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவாவில் 26.63%, உத்தரகண்டில் 18.97%, உத்தரப் பிரதேசத்தில் 23.03% வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.