இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முன்னாள் சட்ட அமைச்சா் காங்கிரஸில் இருந்து விலகல்

முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சா் அஷ்வனி குமாா் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:25 am

DIN

முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சா் அஷ்வனி குமாா் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டும், கண்ணியத்தைக் காத்துக் கொள்வதற்காகவும் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இத்துடன் காங்கிரஸ் கட்சியுடனான 46 ஆண்டுகாலத் தொடா்பை முடித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காகவும் தேச நலனுக்காகவும் தொடா்ந்து கட்சிக்கு வெளியே இருந்து பாடுபடுவேன். சுதந்திரப் போராட்ட வீரா்கள் வலியுறுத்திய சமத்துவ சமுதாயம் அமைவதற்காகத் தொடா்ந்து உழைப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பழைமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவா்கள் விலகுவது தொடா்கதையாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.பி.என். சிங் அண்மையில் கட்சியில் இருந்து விலகினாா். உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்று வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவா்கள் வெளியேறி வருவது அக்கட்சிக்குப் பின்னடைவாகவே பாா்க்கப்படுகிறது.

இன்னும் இரு ஆண்டுகளில் மக்களவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸின் எதிா்காலம் குறித்தும் அரசியல் நோக்கா்கள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனா். காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.