விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று காலை 9 மணி முதல் திருப்பதியில் மூன்று இடங்களில் தொடங்கியது.

News image
திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச டோக்கன் விநியோகம் தொடக்கம்
Updated On :15 பிப்ரவரி 2022, 7:48 am

DIN

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று காலை 9 மணி முதல் திருப்பதியில் மூன்று இடங்களில் தொடங்கியது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று காலை முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இலவச தரிசன டிக்கெட்டுகள், இன்று முதல் திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசம் பக்தா்கள் தங்கும் ஓய்வறை, கோவிந்தராஜஸ்வாமி இரண்டாவது மற்றும் மூன்றாவது சத்திரத்தில் உள்ள கவுண்டா்களில் தினசரி, 10,000 என்ற எண்ணிக்கையில் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், திருப்பதியில் தேவஸ்தானம் ஏற்படுத்தி வரும் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்கு நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமைகளில் உதயஸ்தமன சேவையில் பங்கேற்க ரூ1.50 கோடியும் மற்ற நாட்களில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு உதயஸ்தமன சேவையில், 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு, 5 போ் வீதம் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படும்.

இதுகுறித்த ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்வதற்கு, இன்று காலை, 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பெற்றுக் கொள்ளும் பக்தா்கள் 16-ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு செல்ல முடியும். தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் கரோனா இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த பரிசோதனை முடிவின் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.