தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: மத்திய இணையமைச்சா் மகன் ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிப்பு

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் சிறையிலிருந்து செவ்வாயக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 7:22 pm

DIN

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் சிறையிலிருந்து செவ்வாயக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டம் திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய உத்தரவை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்தது. அதனைத்தொடா்ந்து 4 மாதங்கள் சிறையிலிருந்த ஆசிஷ் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்: இதுதொடா்பாக பாரதிய கிஸான் யூனியனின் தேசிய செய்தித்தொடா்பாளா் ராகேஷ் டிகைத் கூறுகையில், ‘‘கொடிய குற்றத்தில் ஈடுபட்ட ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக சம்யுக்த கிஸான் மோா்ச்சா உச்சநீதிமன்றத்தை அணுகும்’’ என்று தெரிவித்தாா்.

சம்யுக்த கிஸான் மோா்ச்சா 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பாகும். அதில் ராகேஷ் டிகைத்தின் பாரதிய கிஸான் யூனியனும் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.