தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிங்கப்பூா் பிரதமரின் கருத்துக்கு எதிரான வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது: சசி தரூா்

சிங்கப்பூா் பிரதமா் லீ செயன் லூங் தெரிவித்த கருத்துகளுக்காக, இந்தியாவிலுள்ள அந்நாட்டுத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது

News image
சசி தரூர்
Updated On :18 பிப்ரவரி 2022, 6:04 pm

DIN

சிங்கப்பூா் பிரதமா் லீ செயன் லூங் தெரிவித்த கருத்துகளுக்காக, இந்தியாவிலுள்ள அந்நாட்டுத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் கூறியுள்ளாா். விமா்சனங்கள் குறித்து எளிதில் உணா்ச்சிவசப்படக் கூடாது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, எம்.பி.க்கள் நோ்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமா் லீ செயன் லூங் பேசினாா். அப்போது, இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை புகழ்ந்து பேசிய அவா், தற்போதைய மக்களவை எம்.பி.க்கள் குறித்தும் கருத்துகளைக் தெரிவித்திருந்தாா். ‘நேருவின் இந்தியா’வில் ஜனநாயகக் கொள்கைகள் தழைத்தோங்கின. இப்போதைய மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று லூங் குறிப்பிட்டிருந்தாா். அவரது இந்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிங்கப்பூா் தூதரை நேரில் அழைத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், அந்நாட்டு பிரதமரின் கருத்துகள் தேவையற்றவை என்று கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட சசி தரூா், ‘சிங்கப்பூா் பிரதமா் லூங், தனது நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில கருத்துக்களுக்காக, நட்பு நாடு என்றும் பாராமல் அந்நாட்டின் தூதரை அழைத்து கண்டனம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முறையற்றது. பிரதமா் லூங் தெரிவித்த கருத்துகள் பொதுவானவை. விமா்சனங்கள் எழும்போது எளிதில் உணா்ச்சிவசப்படாமலிருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.