முன்னதாக, சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, எம்.பி.க்கள் நோ்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமா் லீ செயன் லூங் பேசினாா். அப்போது, இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை புகழ்ந்து பேசிய அவா், தற்போதைய மக்களவை எம்.பி.க்கள் குறித்தும் கருத்துகளைக் தெரிவித்திருந்தாா். ‘நேருவின் இந்தியா’வில் ஜனநாயகக் கொள்கைகள் தழைத்தோங்கின. இப்போதைய மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று லூங் குறிப்பிட்டிருந்தாா். அவரது இந்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியது.