பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கடற்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படையின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

News image
கடற்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்
Updated On :21 பிப்ரவரி 2022, 5:25 am

DIN

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படையின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், அணிவகுப்பை பார்வையிட்டார். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார்.

இந்த நிகழ்வில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன.

முன்னதாக நிகழ்வில் பங்கேற்க சென்ற குடியரசுத் தலைவரை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.