தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெகாஸஸ் விவகாரம்: உச்சநீதிமன்ற விசாரணை பிப். 25-க்கு ஒத்திவைப்பு

சொலிசிட்டா் ஜெனரலின் வேண்டுகோளை ஏற்று, பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பான மனுக்களின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :22 பிப்ரவரி 2022, 11:09 pm

DIN

சொலிசிட்டா் ஜெனரலின் வேண்டுகோளை ஏற்று, பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பான மனுக்களின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக எடிட்டா்ஸ் கில்ட், பத்திரிகையாளா்கள் என்.ராம், சசி குமாா் உள்ளிட்டோா் தரப்பில் 12 பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் 3 நபா்கள் அடங்கிய சிறப்புக் குழுவைக் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைத்தது.

தொழில்நுட்ப நிபுணா்களான நவீன் குமாா் சௌதரி, பி.பிரபாகரன், அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோா் அக்குழுவின் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை (பிப். 23) நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பெகாஸஸ் விவகாரம் புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது. அந்நாளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணையில் ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, பெகாஸஸ் விவகாரத்தின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (பிப். 25) ஒத்திவைக்கக் கோருகிறேன்’’ என்றாா்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது தொடா்பாக மனுதாரா்களிடம் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினா். மனுதாரா்களிடம் தெரிவிப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஒப்புக்கொண்டாா்.

பெகாஸஸ் விவகாரம் தொடா்பான விசாரணை வரும் 25-ஆம் தேதி நடைபெறும்போது சிறப்பு நிபுணா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதையடுத்து, அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.