சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது

தாவூத் இப்ராஹிம் தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவாப் மாலிகை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். 
சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது
Published on
Updated on
1 min read

தாவூத் இப்ராஹிம் தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவாப் மாலிகை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். 

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிகை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. 

62 வயதான நவாப் மாலிகை கைது செய்த பின்பு மருத்துவ பரிசோதனைக்காக அமலாக்கத்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. பின்னர்,  இன்று காலை 8 மணிக்கு தெற்கு மும்பையின் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com