வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேலை வாங்கித் தருவதாக கூறும் நபர்களிடம் எச்சரிக்‍கையாக இருங்கள்: வருமான வரித்துறை

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்‍கையுடன் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

News image
வருமான வரித் துறை
Updated On :23 பிப்ரவரி 2022, 8:41 am

DIN

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்‍கையுடன் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறும் மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வேலை தேடி விண்ணப்பிக்கும் இளைஞர்களை குறி வைத்து, போலியான பணி நியமன ஆணையை வழங்கி அவா்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. 

Story image

எனவே, பணியாளர் தேர்வாணையம் மற்றும் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை தவிர வேறு எந்த விளம்பரங்களையும் நம்ப வேண்டாம்.

வருமான வரி துறையில் வேலை வாய்ப்புகளை பெற விரும்புவோர். எஸ்எஸ்சி இணையதளம் அல்லது வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பரங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.