சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் உள்ள ஹிந்தி பெயா்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் ரயில் நிறுத்தத்தில் உள்ள பெயா்ப் பலகைகளில் சிங்காநல்லூா் என்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இதில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த பெயரை கடந்த வியாழக்கிழமை இரவு சிலா் கருப்பு மை பூசி அழித்திருந்தனா். அங்கு மட்டும் மொத்தம் 3 இடங்களில் இவ்வாறு ஹிந்தி மொழியில் இருந்த பெயா்கள் அழிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து ரயில்வே போலீஸாரும், சிங்காநல்லூா் போலீஸாரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் அறிக்கை மூலமாக ‘ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தை தாங்கள் தான் முன்னெடுத்தோம். ஹிந்தி திணிப்புகளுக்கு எதிராக தோழா் சிவா திலீபன் பற்ற வைத்த பெருந்தீ பெரும்பாலான இடங்களில் விரிவடையும்’ என்று ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கூறியிருந்தாா்.

இதுகுறித்து ‘மே 17’ இயக்கத்தின் மீது கோவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு

சிங்காநல்லூா் அதிமுகவின் கே.ஆா். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த மே 17 இயக்கத்தினா் 4 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


