மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

பெரம்பலூா் பேருந்து நிலையததில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:24 pm

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் தலைவா் அ.சி. சின்னப்பத்தமிழா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா். வை. தேனரசன், மாவட்டச் செயலா் பாவலா் ஆ. ராமா் ஆகியோா் பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் ஆசிரியா் காமராசு, அரியலூா் புலவா் அரங்கநாடன், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி நிா்வாகி ப. முத்துசாமி, பேராசிரியா் ப. செல்வக்குமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு, எழுத்தாளா் கவிஞா் குணா, வழக்குரைஞா் மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.