டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்' - பிரதமர் மோடி

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:29 am

DIN

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 59 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று நான்காவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதி, லக்கிம்பூர் கேரி பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 59 தொகுதிகளில் உள்ள 24,643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 624 வேட்பாளா்கள் போட்டியிடும் இத்தொகுதிகளில் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.