உ.பி. மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்: மோடி

உத்தரப் பிரதேச மாநில மக்களின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேச மாநில மக்களின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபான்கி மாவட்டத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 

அப்போது பேசிய அவர், பொதுமக்கள் முன்பு பேசிய அவர், உத்தரப் பிரதேச மாநில மக்களின் திறனும், ஆற்றலும் நாட்டின் திறனையும் ஆற்றலும் அதிகரிக்கும் என்று கூறினார். 

மேலும், பிரதேச மாநில மக்களின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அரசியல் செய்யும் அரசுகள் உத்தரப் பிரதேச மக்களின் திறனை மேம்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com