உ.பி.யில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 % வாக்குகள் பதிவு
உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 9.10 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பண்டா 8.79 சதவீதம், ஃபதேபூர் 9.69 சதவீதம், ஹர்டோய் 8.09 சதவீதம், கெரி 10.45 சதவீதம், லக்னோ 8.19 சதவீதம், பிலிபிட் 10.62 சதவீதம், ரேபரேலி 8.00 சதவீதம், சீதாப்பூர் 9.52 சதவீதம், உன்னா 9.23 சதவீதம் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...