ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நொறுக்குத்தீனி வாங்க ரயிலை நிறுத்திய ஓட்டுநர்: 5 பேர் பணியிடை நீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த ஓட்டுநர் ஒருவர் நொறுக்குத் தீனி வாங்க பயணிகள் ரயிலை நிறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 12:07 pm

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த ஓட்டுநர் ஒருவர் நொறுக்குத் தீனி வாங்க பயணிகள் ரயிலை நிறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

பல்வேறு இடங்களில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உணவுகளை தங்களுக்கு தேவையான கடைகளில் நிறுத்தி வாங்குவதை நாம் பாத்திருப்போம். 

அதுபோன்று ராஜஸ்தானில் ஓட்டுநர் ஒருவர் ரயிலை நிறுத்தி நொறுக்குத் தீனி வாங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள விடியோவில், ரயில் தண்டவாளத்தின் அருகே கைகளில் கச்சோரியுடன் ஒருவர் நிற்கிறார். அவர் அருகே ரயிலை நிறுத்தி ரயிலில் இருந்த ஓட்டுநர் கீழே இருந்தவரிடம் கச்சோரியை பெற்றுக்கொண்டு மீண்டும் ரயிலை இயக்குகிறார். 

இது தொடர்பாக பேசிய ஜெய்ப்பூர் மண்டல ரயில்வே மேலாளர், ரயிலை நிறுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு ஓட்டுநர்கள், கேன் மேன் இருவர் உள்பட 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.