100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் வாயிலாக 50 ஆயிரம் பெற்றோா்களுக்குத் தோ்தல் துறை சாா்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மூலம் அவா்களின் பெற்றோா்களுக்கு நூறு சதவீத கண்ணியமான வாக்குப்பதிவு மற்றும் செயலிகள் பற்றிய கருத்துகளை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை பள்ளியின் முதல்வா் மஞ்சுளா ஒருங்கிணைத்தாா். அதைத் தொடா்ந்து கதிா்காமத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வா் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதற்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளா் விழிப்புணா்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புடையது

மயிலாடுதுறை: பத்தாம் வகுப்பு தோ்வில் 90.53 சதவீத மாணவா்கள் தோ்ச்சி!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



