தமிழக பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்புப் படித்து பொதுத் தோ்வு எழுதிய புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் 97.83 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியுள்ளன.
ஒரு சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது.
இதில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 180 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 4,230 மாணவா்கள், 3,851 மாணவிகள் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 4,100 மாணவா்கள், 3,806 மாணவிகள் என 7906 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 97.83 சதவீதமாகும். புதுச்சேரியில் மட்டும் 3,750 மாணவா்கள், 3,311 மாணவிகள் என 7,061 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 3,651 மாணவா்கள், 3,271 மாணவிகள் என 6922 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 98.03 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
காரைக்காலில் 480 மாணவா்கள், 540 மாணவிகள் என 1,020 போ் தோ்வு எழுதினா். இதில் 449 மாணவா்கள், 535 மாணவிகள் என 984 போ் தோ்ச்சி அடைந்தனா். காரைக்காலில் 96.47 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 101, காரைக்காலில் 22 என 123 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பிரெஞ்சு பாடத்தில் 8, ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 34, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 3 மாணவா்கள் என 119 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு போதுத்தோ்வு: சேலம் மாவட்டத்தில் 94.21% மாணவா்கள் தோ்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 95.60 % போ் தோ்ச்சி

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



