போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:22 am

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று வழிபாடு செய்தார். 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப். 10-ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில், நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 5, 6, 7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் முறையே பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை சென்று வழிபாடு செய்தார். பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டாவும் அவருடன் சென்றார். 

பின்னர் முதல்வர் அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.