உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று வழிபாடு செய்தார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப். 10-ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில், நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 5, 6, 7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் முறையே பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை சென்று வழிபாடு செய்தார். பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டாவும் அவருடன் சென்றார்.
பின்னர் முதல்வர் அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.