கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உக்ரைனிலிருந்து வெளியேற அதிபர் மறுப்பு

உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க உதவியை அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 5:35 am


உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க உதவியை அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.

உக்ரைன் மீது பலமுனைத் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அந்த நாட்டு தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற மூன்றாவது நாளில் தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என அதிபர் ஸலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, தங்களது அரசு உதவியுடன் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஸ்லென்ஸ்கி அமெரிக்காவால் அறிவுறுத்தப்பட்டார்.

போர் இங்குதான் நடக்கிறது என்றும் தற்போதைய தேவை பயணம் அல்ல, ஆயுதங்கள்தான் என்றும் ஸலென்ஸ்கி கூறியதாக அமெரிக்க உளவுப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி ரஷியப் படைகள் முன்னேறத் தொடங்கியதையடுத்து, அங்கு பலத்த சத்தங்கள் எழத் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.