நாட்டில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா

​இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,273 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20,439 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 243 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,22,90,921 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,13,724 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,11,472 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 24,05,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,77,44,08,129 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com