தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 3:04 am

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.

சித்ரகூட், பிரயாக்ராஜ் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி தொகுதிகள் அடங்கும். இதனால், 5-ம் கட்ட வாக்குப்பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

துணை முதல்வர் கேச பிரசாத் மௌரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார்.

5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தால், 292 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடையும். மீதமுள்ள தொகுதிகளுக்கு மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.