கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிசாவில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
முன்னதாக, 1 முதல் 7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் உயர் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏற்கனவே பிப். 7 முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் திலகமிட்டு ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால், பள்ளி மாணவர்களுக்கு பண்டிகை போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும், கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மேளம் அடித்து மாணவர்களை வரவேற்றனர்.
மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


