ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தெலங்கானா பாஜக தலைவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

பாரதிய ஜனதா கட்சியின் தெலங்கானா தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய்க்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து கரிம்நகர் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜனவரி 2022, 10:55 am

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தெலங்கானா தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய்க்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து கரிம்நகர் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுக்கு எதிராக கரிம்நகரில் பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் மாநில தலைவர் சஞ்சய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது காவல்துறையினரை தாக்கியதாகவும், கரோனா விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று பிற்பகல் கரிம்நகர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஆஜர்படுத்தப்பட்டார். இவரின், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தெலங்கானா காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.