47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்கு பாகிஸ்தானில் கனமழை: 300 வீடுகள் இடிந்து சேதம்

மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. 

News image
Updated On :5 ஜனவரி 2022, 11:08 am

PTI

மேற்கு பாகிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழி காரணமாக சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. 

திங்கள்கிழமை இரவு பலுசிஸ்தான் மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. இதனால், தாழ்வுப் பகுதியான மக்ரான் மிகவும் பாதிக்கப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 20 மணி நேரத்தில் 10 செ.மீ மழைப் பதிவானது. குவாதர் பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. 

கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவசர மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை அனுப்பக்கோரி அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். 

கராச்சியுடன் இணைக்கும் மக்ரான் கடற்கரை நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

குவாதர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே உள்ள மலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை. 

மேலும், இந்த வார இறுதி வரை மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.